புத்தாண்டில் புதிய பட நிறுவனத்தின் முதல்பட பூஜை. உருவாகிறது விதார்த், கிஷோர் நடிப்பில் ‘காகங்கள்.’

விதார்த், கிஷோர், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘காகங்கள்.’ படத்தை ஆனந்த் அண்ணாமலை எழுதி, தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடந்தது.
பட பூஜையோடு, படத்தை தயாரிக்கும் ‘மாயவரம் பிக்சர்ஸ்’ பட நிறுவனத்தின் துவக்க விழாவும் இணைந்து கொண்டது.
மாயவரம் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக இந்த படம் உருவாகிறது. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பண்டிகைக்கு பின்னர் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.
இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக சொல்கிறார்கள் ‘மாயவரம் பிக்சர்ஸ்’ பட நிறுவனத்தினர்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு
இசை: எம்.எஸ்.கிருஷ்ணா
கலை இயக்கம்: ராமு தங்கராஜ்
ஒலி வடிவமைப்பு: அந்தோணி பிஜே ரூபன்
ஆடை வடிவமைப்பு: டீனா ரொசாரியோ