இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை நூல் அறிமுகத்தோடு துபாயில் தமிழர்களின் பொங்கல் விழா!

அமீரகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா நடைபெற்றது.
திருக்குறள்களின் எண்ணிக்கை படி, 1330 பேர் பொங்கல் வைத்தனர்.
நிகழ்வில் துபாய் தமிழ்ச் சங்கத் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்புரைற்றினார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி எழுதிய சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
விழாவில் மாஸ் ஈவென்ட்ஸ் முருகேசன் நன்றியுரையாற்றினார்.
