அண்ணாமலைக்கு அரோகரா… புதுயுகம் தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபத் திருவிழா நேரலை!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6 அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.தொடர்ந்து மாலையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இந்த நிகழ்வை திருவண்ணாமலையிலிருந்து டிசம்பர் 6 மாலை 5 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்புகிறது.