மூன்று வருடம் முயற்சித்து காதலைச் சொன்ன நாயகன் சந்தித்த திடுக்கிடும் சம்பவம்! ‘1982 அன்பரசின் காதல்’ படத்தின் கதை இதுதான்…

ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம், செல்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘1982 அன்பரசின் காதல்.’

இந்த படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உல்லாஷ் சங்கர். இவர் பல மொழிப் படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணிபுரிந்தவர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்… “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயற்சித்து முடியாமல் போகிறது. அதனால் நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர். மனம் தளராத அன்பரசு காதலி வசிக்கும் கேரளாவுக்கு சென்று அவளிடம் காதலை சொல்ல தயாரானபோது அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா? இல்லையா? என்பதே கதையின் நிறைவு.

இந்த கதைக்கு பரபரப்பான திரைக்கதையும் நறுக் வசனங்களும் எழுதி எனது முதல் படமாக இயக்கியுள்ளேன். படத்தின் துவக்கம் முதல் உச்சகட்ட காட்சி வரை திரில், மர்மம், ஆக்சன், காமெடி, மற்றும் இசைக்கு முக்கியத்துவம் தரும்படமாக இருக்கும்” என்றார்.

படத்தின் காட்சிகள் தேனி, கம்பம், போடிநாயக்கனூர், மூணார் மற்றும் கேரளாவில் உள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

தொழில்நுட்பக்குழு:- ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், கிரேசன் படத்தொகுப்பையும், எஸ். சிந்தாமணி இசையையும், சிபு கிருஷ்ணா கலையையும், டின்ஸ் ஜேம்ஸ் சண்டைப் பயிற்சியையும், நிதின் கே. உதயன் புகைப்படங்களையும், ராயீஸ் சுல்தான் நடன பயிற்சியையும், விஜயமுரளி மக்கள் தொடர்பையும் அனுமோட் சிவராம், பென்னி இருவரும் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp