‘தேஜாவு’ வெற்றிப்பட இயக்குநரின் அடுத்த படம்… ஹீரோவாக ‘செம்பி’ படத்தில் அசத்திய அஸ்வின்!

அருள்நிதி நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான  ‘தேஜாவு’ படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
அந்த படத்தையடுத்து தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான ‘ரிபீட்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார்.
இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘செம்பி’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நடிக்கும் புதிய படத்தை அரவிந்த் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

ரொமாண்டிக் திரில்லராக உருவாகும் இந்த படத்தினை ழென் ஸ்டுடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறது.

18

Leave a Reply

Your email address will not be published.