பாரதியார் பாடலுக்கு பரத்வாஜ் இசை; எடக்கு மடக்கு கேள்விகளுக்கு நடிகர் அருண் விஜய் பதில்கள்… ஜெயா டிவியில் இன்னும் பல சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

சிறப்பு பட்டிமன்றம்
ஜெயா டிவியில் வரும் சுதந்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு சொல்லின் செல்வர் மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
பார்த்தேன் ரசித்தேன்
ஆட்டோகிராப், ஜெமினி, அட்டகாசம் உட்பட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அவர், தான் இசையமைத்த ஹிட்டான பாடல்களை பாடியும், அப்பாடல்கள் உருவான விதத்தையும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ’உனைப்பார்த்த பின்புநான்’, ’ஒவ்வொரு பூக்களுமே’, ’ஆப்பிள் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்களை பின்னணிப்பாடகர்களுடன் பாடியுள்ளார். மேலும், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரத்தியேகமாக பாரதியார் பாடலுக்கு இசையமைத்து ஜெயா டிவி மூலமாக நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்நிகழ்ச்சியை மோகனா தொகுத்துவழங்கியுள்ளார்.
எது சுதந்திரம்?
தொகுப்பாளர் திண்டுக்கல் சரவணன் கேட்கும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பிரபல நடிகர் அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் பொது மக்கள் கூறும் வித்யாசமான பதில்களை கொண்ட ஜாலியான நிகழ்ச்சி ‘எது சுதந்திரம்’ .இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 அன்று இரவு 9:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
விருந்தினர் பக்கத்துடன் சுதந்திர இந்தியாவில் சென்னையின் பக்கத்தை எடுத்துக் காட்டும் நாம் பெற்ற சுதந்திரம் என்னும் சிறப்பு பகுதியுடன் காலை 7.30 மணிக்கு சிறப்பு காலைமலர் ஒளிபரப்பாகிறது .