ஒரே நாளில் நடக்கும் ஹாரர் கதையாக ‘சைத்ரா.’ பேயாக மிரட்டும் யாஷிகா ஆனந்த்!

யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியா, மிரட்டும் பேயாக நடித்துள்ள படம் ‘சைத்ரா.’

இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம். ஜெனித்குமார். ‘பொட்டு’, ‘கா’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் இவர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இது 24 மணிநேரத்தில் நடக்கும் கதை. ‘பீட்சா’, ‘டிமாண்டி காலனி’ படங்களைப் போன்ற வித்தியாசமான திரைக்கதையில் உருவாக்கியுள்ளோம். இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் கூடிய முழுக்க முழுக்க திரில்லர் – ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

படத்தின் காட்சிகள் முழுவதையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம.  படப்பிடிப்பு நிறைவு பெற்று பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்றார்.

படக்குழு விவரம்:-

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( Mars Productions) என்கிற புதிய  நிறுவனம் சார்பில் கே. மனோகரன் தயாரித்துள்ளார்.

இணை தயாரிப்பு: டி. கண்ணன் வரதராஜ்

பாடல்கள்: மணிகண்டன், விஜய லட்சுமி

இசை: பிரபாகரன் மெய்யப்பன்

ஒளிப்பதிவு: சதீஷ் குமார்

எடிட்டிங்: எலிஷா (‘பொட்டு’ படத்திற்கு எடிட்டிங் செய்தவர்.)

தயாரிப்பு மேற்பார்வை: தேக்கமலை பாலாஜி

மக்கள் தொடர்பு: மணவை புவன்


Leave a Reply

Your email address will not be published.

WhatsApp