இளையராஜா இசை; கிருத்திகா உதயநிதி இயக்கம்; யுவன் குரல் இணைந்து உருவாக்கிய ‘யார் இந்த பேய்கள்.’ குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு பாடல் வெளியீடு!

நம் நாட்டில் பாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக போராட மக்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு ‘யார் இந்த பேய்கள்‘ என்ற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது.
‘இசைஞானி’ இளையராஜா இசையில், பா.விஜய்யின் பாடல் வரிகளில் இந்த வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
சமூகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும்.
அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.அவற்றிலிருந்து மீட்டு குழந்தையின் குழந்தைத்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த பாடல், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே தகவல் தொடர்பு எத்தனை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
சோனி மியூசிக் வெளியிட்ட இந்தப் பாடலின் நோக்கம் விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், மக்களை பயிற்றுவிக்கும் வகையிலும் இருக்கிறது.
வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரபலங்களை பாதித்தன் விளைவாகவே இந்த விழிப்புணர்வு பாடல் வெளிவந்துள்ளது.
‘யார் இந்த பேய்கள்’ பாடல் குழு:
இசை – இசைஞானி இளையராஜா
பாடியவர் – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
இயக்கம் – கிருத்திகா உதயநிதி
பாடல் வரிகள் – பா விஜய்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – சக்தி வெங்கராஜ்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
