புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மீண்டும் ‘வீடு.’ சனி மற்றும் ஞாயிறுகளில்…

பெரும்பாலான மக்களின் கனவுகளில் ஒன்று சொந்த வீடு. அந்த கனவை நனவாக்கும் முயற்சியாக வடிவமைக்கப்பட்ட வீடு என்ற நிகழ்ச்சியின் முதல் பாகம் நேயர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான நிகழ்ச்சியாக மாறியது.
குறைந்த பொருள்செலவில் வீடு, மாற்றுமுறையில் வீடு, பழமையான தொழில்நுட்பத்தில் வீடு என்று விதவிதமான வீடுகளைப்பற்றி மையப்படுத்துகிறது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகிவருகிறது. வீட்டின் வடிவமைப்பாளர்கள் மற்றும் உடைமையாளர்களின் விளக்கங்களோடும் , அனுபவங்களோடும் வரும் வீடு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கும் ஞாயிறு காலை 10:30 மணிக்கும் புதியதலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை விஷ்ணு பரத் தொகுத்து வழங்குகிறார் .